இந்திய அரசிடம் இருந்து இந்தியா பாக்கிஸ்தான் தொடரை நடத்த அனுமதி வாங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கானிடம் அந்த தகவலை தெரிவித்தது. ஆனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டாம். உங்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்புங்கள் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து பேசிய சஹாரியார் கான், பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது, இந்தியா ஏன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டாம் என காரணம் கூறவில்லை. இந்த தொடர் நாங்கள் நடத்த வேண்டிய தொடர், அதனால் இந்த தொடரை நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் என எண்ணுகிறோம். ஏற்கனவே ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திய இந்தியா இப்போது அங்கு நடத்த மறுப்பது ஏன் என்றார்.