இந்தியாவில் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

திங்கள், 16 நவம்பர் 2015 (17:34 IST)
பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது எனவும் இந்த தொடரை இந்தியா நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார்.
 
இந்திய அரசிடம் இருந்து இந்தியா பாக்கிஸ்தான் தொடரை நடத்த அனுமதி வாங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கானிடம் அந்த தகவலை தெரிவித்தது. ஆனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டாம். உங்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்புங்கள் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் கேட்டுக்கொண்டார்.
 
இது குறித்து பேசிய சஹாரியார் கான், பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது, இந்தியா ஏன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டாம் என காரணம் கூறவில்லை. இந்த தொடர் நாங்கள் நடத்த வேண்டிய தொடர், அதனால் இந்த தொடரை நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் என எண்ணுகிறோம். ஏற்கனவே ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திய இந்தியா இப்போது அங்கு நடத்த மறுப்பது ஏன் என்றார்.
 
அடுத்த சில நாட்களில் மீண்டும் நாங்கள் பேசவிருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்