ஹுத்ஹுத் புயலால் 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெறுமா?

சனி, 11 அக்டோபர் 2014 (17:23 IST)
ஹுத்ஹுத் புயல் கரையை கடக்கும் போது ஆந்திர மாநிலத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 ஆவது ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என சந்தேம் எழுந்துள்ளது.
இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்குபெறும் 3 ஆவது ஒருநாள் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அக் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.
 
இந்நிலையில், விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடப்பதால் ஒரு நாள் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.
 
இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் சம்பள் பிரச்சனை காரணமாக முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுமா இல்லையா என ஒரு சர்ச்சை எழுந்து ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்