இந்நிலையில் போட்டி குறித்து தற்காலிக கேப்டன் கோலி கூறுகையில், எங்களது டெஸ்ட் அணி வீரர்கள் மீது நம்பிக்கை உள்ளது. மேலும் வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய சவாலை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். எந்தநிலையிலும் ஆட்டத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே போட்டியின் யுக்தியாகும்.
மேலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடிக்க பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் எங்களது கவனம் டெஸ்ட் தொடரில் மட்டுமே இருக்கும். பிறகு முத்தரப்பு போட்டி, அதன்பின்னரே உலக கோப்பை குறித்து ஆலோசிப்போம். ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை போட்டி நடக்கவுள்ளதால், அதற்கு முன்பாக அங்குள்ள சூழலை பழகிக் கொள்வதற்கு இந்த தொடர் மிகச்சிறப்பாக உதவும் என்று கோலி கூறினார்.