உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைக்காது. இதை நான் இந்த உண்மையை, இந்த தொடரின் போதும், அரை இறுதிக்கு தகுதிபெற்ற போதும்தான் தெரிந்து கொண்டேன்.
எங்களது பந்து வீச்சாளர்கள் புத்திசாலித்தனத்துடன், ஆக்ரோஷமாகவும் பந்து வீசுகிறார்கள். இதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததுமே, உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகியது. குறுகிய தினங்களே இருந்த நிலையிலும், அணி சிறப்பாக தயாராகியது. எனவேதான், எங்களால் சிறப்பாக ஆட முடிகிறது.