இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள டேவிட் மில்லர், “நாங்கள் மாபெரும் கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் 2-0 என்று முன்னிலையில் உள்ளோம், எனவே 3-0 என்று அதனை மாற்ற உறுதியாக இருக்கிறோம்.
நீங்கள் சொல்வது போல், வேகமும், நம்பிக்கையும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பெரிய விஷயம். எங்களுடைய முன்னேற்பாடுகள் சிறப்பான முறையில் இருந்தது என்று நினைக்கிறேன். மேலும், நாளை வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு மேல்நிலைக்கு வர முயற்சிப்போம்.
தொடரை 2-0 என்ற முன்னிலையுடன் கொல்கத்தாவுக்கு வருவது பெருமையாக உள்ளது. தொடரை வென்றது உண்மையில் பெரிய விஷயம். இங்கு வரும்போதே நன்றாக ஆட வேண்டும் என்ற உறுதியுடனும், எங்களுக்கு நாங்களே அழுத்தம் கொடுத்துக் கொண்டும் வந்தோம்.