தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் ஒவ்வொரு அணியும் சராசரியாக 300 ரன்களுக்கு மேல் குவித்து வருகின்றன. மேலும், இதுவரை நடந்த 27 லீக் ஆட்டங்களில் 400 ரன்னுக்கு மேல் மட்டும் 3 முறை குவிக்கப்பட்டுள்ளது.
தனி வீரராக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஜிம்பாப்வேவிற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார்.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் 300 ரன்கள் குவிக்க முடியும் என்று ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ”ஒருநாள் போட்டியில் தற்போது கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.