தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வீரேந்திர ஷேவாக் கலந்து கொண்டார். அப்போது சச்சின் டெண்டுலகருடன் களமிறங்கிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷேவாக், “டெண்டுல்கருடன் களமிறங்குவது சிங்கத்தின் துணையுடன் காட்டில் நடமாடுவதைப் போன்றதொரு நம்பிக்கையை அளிக்கும்.
என்னை எவரும் தொட முடியாது. இந்த நம்பிக்கை டெண்டுல்கரிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டேன். ஒருமுறை டெண்டல்கரிடம் கூறினேன், ’அவர்கள் ஷேவாக்கைப் பற்றியோ, டெண்டுல்கரைப் பற்றியோ கவலைப்படமாட்டார்கள். அவர்களது ஒரே கவலை டெண்டுல்கரை எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்’ என்று.