டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதிய இந்தியா தோல்வியை தழுவினாலும், பெரிதாக விமர்சிக்கப்படவில்லை. இந்த ஆட்டத்தில் இந்தியா சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதிலும் விராட் கோலியின் ஆட்டம் அபாரம்.
உலகக் கோப்பை தொடர் முழுவதும் விராட் கோலி தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் அரையிறுதியுடன் வெளியேறியது இந்தியா. இதனையடுத்து விராட் கோலி தனது இண்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், தன்னோடு விளையாடிய சக வீரர்களுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.