மீண்டும் இணைந்த விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா

வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (19:06 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணாமாக சில காலம் இருவரும் பிரிந்து இருந்தனர்.


 
 
விராட் கோலி சிறப்பாக விளையாடும் போது அவரை வாழ்த்த தவறவில்லை அனுஷ்கா ஷர்மா. அதேப்போல் அனுஷ்கா ஷர்மாவை விமர்சிப்பவர்களை கடிந்துகொள்ளவும் தவறவில்லை விராட் கோலி.
 
அனுஷ்கா உடன் மீண்டும் சேர பல முயற்சிகள் எடுத்து வந்தார் விராட் கோலி. ஆனால் அவர் சேர்ந்த பாடில்லை. இந்நிலையில் விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் மீண்டும் சேர்ந்துள்ளனர். மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் இருவரும் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டுள்ளனர்.
 
அனுஷ்கா ஷர்மா தற்போது சுல்தான் படப்பிடிப்பில் உள்ளார். விராட் கோலி அடுத்ததாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்