டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

வியாழன், 28 ஏப்ரல் 2022 (20:16 IST)
இந்த ஆண்டிற்காக டி.என்.பி.எல் தொடருக்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம்2016 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போல் டி.என்.பி.எல்9 தமிழ் நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் போட்டியை  நடத்தி வருகிறது.

இந்த ஆண்டிற்கான போட்டி வரும் ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்  நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 6 வது டி.என்.பி.எல். போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜூன் 23 ஆ,ம் தேதி போட்டிகள் தொடங்குகிறது. கோவை, நத்தம்,     நெல்லை, சேலம் ஆகிய மைதான ங்களில் போட்டி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் எனவும், பிளே ஆப் சுற்று, மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 32 ஆட்டம் நடைபெறும் எனவும் பிளே ஆப் போட்டிகள் சேலம் மற்றும் கோவையில் நடக்கும் எனவும் ஜூலை 30 ஆம் தேதிகோவையில் இறுதிப் போட்டி நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இம்முறை, நடப்பு சேம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் துவக்க ஆட்டத்தில் நேல்லை ராயல் கிங்ஸ் அணியுடன்மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்