இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மழையால் ரத்து

திங்கள், 16 நவம்பர் 2015 (01:58 IST)
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
பெங்களூரில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், அங்கு காலை முதலே கனமழை பெய்து வந்ததால் ஆட்டத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று நடுவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனயடுத்து, 2ஆவது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
 
இந்த போட்டியில் முதல் நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 214 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடதக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்