டி-20 கிரிக்கெட் : இந்தியாவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு !

புதன், 28 செப்டம்பர் 2022 (21:41 IST)
இந்தியாவுக்கு 107 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது.


இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் இதில் இந்திய அணி டாஸ் வென்று உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில், மர்க்ராம் 25 ரன்களும், பார்ன்வெல் 24 ரன் களும், மகாராஜ் 41 ரன் களும் அடித்தனர். 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடியில் 106 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு  நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ராகுல் 15 ரன்களும், கோலி 3 ரன்களும், யாதவ் 17 ரன்களும் அடுத்துள்ளனர். வருகின்றனர். இந்திய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன் கள் அடுத்து விளையாடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்