இந்நிலையில் இத்தொடரின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து நட்சத்திர வீரரான கோலி விலக வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், தொடர்ச்சியாக கோலி, அஸ்வின் போன்ற வீரர்கள் களத்தில் விளையாடி வருவதால் அவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வு வழங்க வேண்டும். தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் அவருக்கு சற்று ஓய்வு கிட்டியுள்ளது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.