306 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை அணி

சனி, 22 ஆகஸ்ட் 2015 (16:56 IST)
இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இலங்கை அணி 306 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள பி.சாரா ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 393 ரன்கள் குவித்தது. இதையடுத்து களம் இறங்கிய இலங்கை அணி அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 102 ரன்கள், திரிமண்னே 62 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின், இஷாந்த சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்