“தினேஷ் கார்த்தியை எந்த இடத்தில் இறக்குவார்கள்…” மூத்த வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி

புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:09 IST)
ஆசிய கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கை எந்த இடத்தில் இறக்குவார்கள் என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடித்துள்ளார்.

ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கிய வரும் தினேஷ் கார்த்திக், ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் அந்த இடத்தில் போட்டியில் உள்ளனர். இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் “அவரை அணியில் எடுத்தாலும், ஆடும் லெவனில் இருப்பாரா என்பது சந்தேகமே. அவரை ரிஸர்வ் வீரராகவே எடுத்திருக்க வேண்டும்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்