ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?.. பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான சோக செய்தி!

வெள்ளி, 30 ஜூன் 2023 (14:57 IST)
கடந்த பிப்ரவரியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து  அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காயம் காரணமாக அவர் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களை இழந்தார். அவர் ஆசியக் கோப்பை தொடருக்கு மீண்டுவரக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி அவர் அந்த தொடருக்கும் திரும்ப வரமாட்டார் என தெரிகிறது.
இந்நிலையில் இப்போது பிசிசிஐ தரப்பில் இருந்து கசிந்துள்ள தகவலின் படி ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை தொடருக்கும் தயாராகி வருவது சற்று சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. அவரது காயத்தின் தன்மை எதிர்பார்த்த வேகத்தில் குணமாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்