14 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி, மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. ஆஸ்திரேலியாவில் 26 போட்டிகளும், நியூசிலாந்தில் 23 போட்டிகளும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மீண்டும் அதிவேக சதமடிப்பது குறித்து பேசிய சாகித் அஃப்ரடி, “இது போன்ற சாதனைகளை திட்டமிட்டு நிகழ்த்துவோம். ஆனால் அது மிகவும் சிறப்பு உள்ள நாளின் போது தான் நிகழ்கிறது. உலக கோப்பை போட்டியின் போது டிவில்லியர்ஸ் ஏற்படுத்தியிருந்த சாதனையை மேம்படுத்த முயற்சி செய்யும் நாளே சிறந்த நாளாகும்.