நேற்று நடைபெற்ற டி 20 பயிற்சி போட்டியில், இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பயிற்சி ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன் படி களமிறங்கிய இந்திய 49.1 ஒவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 4 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மா 67 ரன்களும், ரஹானே 41 ரன்களும், மணீஷ் பாண்டே 58 ரன்களும் எடுத்தனர்.