இதனையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பதவியையும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியையும் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, சவுரவ் கங்குலி மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஷஷாங்க் மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக, 2008ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை அவர் தலைவராக பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.