மேலும் இந்த சாதனைகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் கூறுகையில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. எனினும் ஒருநாள் போட்டி தொடரில் இரண்டு இரட்டை சதம் அடிப்பது என்பது மிகச்சிறப்புக்குரிய செயலாகும். இந்த அரிய சாதனையைப் படைத்த ரோகித்சர்மாவை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.