ஐபில் தொடரில் நோ பால் மற்றும் அகல பந்துக்கும் வருகிறது ரிவ்யூ முறை!

புதன், 8 மார்ச் 2023 (08:06 IST)
ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையே மிக குறுகிய கால இடைவெளியே உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விக்கெட்கள் மற்றும் கேட்ச்கள் குறித்த சந்தேகங்களுக்கு டி ஆர் எஸ் மூலமாக ரிவ்யூ கேட்க முடியும் என்று ஐசிசி விதிகள் உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நோ பால் மற்றும் அகலப்பந்து ஆகியவற்றிலும் சந்தேகம் இருந்தால் கள நடுவர்களுக்கு எதிராக மூன்றாவது நடுவருக்கு அணிகள் மேல் முறையீடு செய்யலாம் என்ற புதிய விதிகள் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்