பஞ்சாப் அணியிலிருந்து அஸ்வின் வெளியேற்றம்..

Arun Prasath

வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:58 IST)
பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ரவிசந்திரன் அஸ்வின் தற்போது அந்த அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின். இந்நிலையில் சமீபத்தில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து கும்ப்ளேவின் ஆலோசனையின்படி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், பஞ்சாப் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அஸ்வின் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறுகிறாரா என்ற கேள்விகள் எழுந்தநிலையில், அஸ்வின் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார் என கூறப்பட்டது.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினை டெல்லி அணி 1.5 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்