ஓட்டல் அறையில் பேயா? பயந்து அலறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

செவ்வாய், 27 ஜனவரி 2015 (10:43 IST)
ஓட்டல் அறையில் படுக்கை தானாக ஆடியதால் அலறியடித்து ஓட்டல் அறையை விட்டு வெளியேறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.
 
பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சொகைல் தங்கியிருந்த ஓட்டல் அறையில் திடீரென படுக்கை தானாக ஆடியதால் பயந்த அவர் ஓட்டல் அறையை விட்டு வெளியேறினார்.
 
இத்தகவலை சொகைல் உடனடியாக தனது பயிற்சியாளரிடம் தொலைபேசியில் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பயிற்சியாளார் சோகைல் நடுக்கத்துடன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
படுக்கை தானாக ஆடியதற்கு காரணம் பேய் என்று சொகைல் கூறியுள்ளார். எனினும் இப்புகாரை  ஓட்டல் நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் ஓட்டலில் பேய் நடமாட்டம் ஏதும் இல்லை என கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்