339 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் சர்மா அவுட் ஆனார். பின்னர் 3வது ஓவரில் கேப்டன் கோஹ்லி, 9வது ஓவரில் தவான், 13வது ஓவரில் யுவராஜ்சிங், 14வது ஓவரில் தோனி என ஐந்து முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர். ஓரளவு அடித்து ஆடி வந்த பாண்டியாவை ஜடேஜா ரன் அவுட் ஆக்கியதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமது “ இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. உடனே மறந்து விடும் வெற்ற அல்ல இது. பல நாட்களாக துபாயை சொந்த மைதானனமாக கருதி விளையாடி வருகிறோம். தற்போது வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இனியாவது மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும்” என அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.