இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனக்கும், பயிற்சியாளர் கும்ளேவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ளேவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது தொடர்ந்து கொண்டிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால் பயிற்சியாளர் கும்ளே மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.