​உடல்நலக் குறைவு: மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து

புதன், 7 அக்டோபர் 2015 (07:44 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  வீரரும் போட்டி வர்ணனையாளருமான நவ்ஜோத் சிங் சித்து ரத்த உறைதல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


 
 
நேற்று அவருக்கு திடீரென ரத்த உறைதல் ஏற்பட்டது. இதனால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்துவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 51 டெஸ்ட், 136 ஒரு நாள்  போட்டிகளில் விளையாடி உள்ள சித்து 9 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்