தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு

திங்கள், 23 ஜூன் 2014 (11:05 IST)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என்.சீனிவாசன் 14 ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 84 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடர்ந்து 14 ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக நரசிம்மனும் தொடருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்