இந்நிலையில் ரோகித் சர்மாவின் டெஸ்ட் நிலையை பார்த்தால் சற்று பயமாகதான் உள்ளது. இவர் கடைசியாக பங்கேற்ற 2 போட்டியில் வெறும் 53, 39 மற்றும் 6 ரன்களை குவித்துள்ளார். ஒருவேளை ரோகித்சர்மாவால் இலங்கை டெஸ்ட் தொடரில் பிரகாசிக்க முடியவில்லை என்றால் அவரின் டெஸ்ட் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகமில்லை.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், தற்போது எனது டெஸ்ட் வாழ்க்கை இக்கட்டான சூழலில் உள்ளது. ஒவ்வொரு வீரரும் டெஸ்ட் போட்டியில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கிவது போல் டெஸ்டிலும் செயல்படுவேன் என்றார்.