இந்த போட்டி பற்றி பேசியுள்ள மோஹித் ஷர்மா “ஆரம்பத்தில் இருந்தே நான் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். யார்க்கர்களாக வீசவேண்டுமென முடிவு செய்திருந்தேன். ஆனால் பந்து விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் தூங்க முடியவில்லை. நான் பந்தை வேறு எப்படி வீசியிருக்கலாம். நாங்கள் வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் தூங்க முடியவில்லை. இதனை கடந்து போக முயற்சி செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.