பாகிஸ்தான் - வங்கதேசம் முதல் டெஸ்ட்: டிராவில் முடிந்தது

ஞாயிறு, 3 மே 2015 (09:59 IST)
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி இருதரப்பிற்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தது. 
 
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் ஏப், 28 ஆம் தேதி அன்று தொடங்கியது. 
இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்க தேச அணி 332 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 628 ரன்கள் என வலுவான ஸ்கோரை எட்டியது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டனர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய தமீம் இக்பால் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 
 
இறுதியில் வங்கதேச அணி 555 ரன்களை எட்டிய போது இரு கேப்டன்களும் ஆட்டத்தை முடித்து கொண்டனர். இதனால் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்