இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி வருகிற 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததால், கூடுதல் பலமாக அணியில் ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.
இந்த தொடரில் அவரது தந்தை ரோஜர் பின்னி இடம்பிடிக்கவில்லை. எனினும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஜர் பின்னி இடம்பிடித்து விளையாடியுள்ளார். தற்போது இதே சூழல் அவரது மகனான ஸ்டூவர்ட் பின்னிக்கும் நிகழ்ந்துள்ளது. முதல் போட்டியில் இல்லாத அவர் 2 ஆவது போட்டியில் விளையாடவுள்ளார் என்பதே அந்த கூடுதல் சிறப்பு. இந்த அறிய அதிசயம் சுமார் 30 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.