14 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி 65 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து மிகவும் பரிதாபமாக இருந்தது. 100 ரன்னை அந்த அணி கடக்குமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் லதம் மட்டுமே பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். 106 ரன்னில் 8-வது விக்கெட்டையும் இழந்த அந்த அணிக்கு சௌதி மற்றும் லதமின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தது.
இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் அமித் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 191 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கியுள்ளது இந்திய அணி.