முக்கிய வீரர்கள் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வுபெற வேண்டும்- கவுதம் காம்பீர்

புதன், 4 ஜனவரி 2023 (18:57 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஐபிஎல்- போட்டிகள் அவ்வளவு முக்கியமில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக இருந்தவர்  கெளதம் கார்த்திக்.

இவர், தற்போது பாஜக சார்பில், மா  நிலங்களை எம்பியாக பதவி வகித்து வருகிறார்.

அவ்வப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர்கள், ஆட்டம், குறித்து விமர்சனம் செய்து வரும் கவுதம் காம்பீர், தற்போது, ஐபிஎல் போட்டிகள் குறித்துக் கருத்துக் கூறியுள்ளார்.

அதில்,  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. ஆனால், ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.

ALSO READ: ஐபிஎல் ஏலம்...தோனியை புகழ்ந்த பிரபல வீரர்....ரசிகர்கள் மகிழ்ச்சி
 
ஆனால், ஐபிஎல் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர், எனவே, அணியிலுள்ள முக்கியமான வீரர்கள் அனைவரும் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற்று அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு தங்களை தயார் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் காம்பீர் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்