மழையால் நின்ற டி20 போட்டி; டிக்கெட் கட்டணம் ரிட்டர்ன்! – கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

திங்கள், 20 ஜூன் 2022 (10:56 IST)
நேற்று நடந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் டிக்கெட் கட்டணம் திரும்ப அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 4வது ஓவரின்போதே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

போட்டி முழுமையாக நடைபெறாததால் போட்டியை காண டிக்கெட் எடுத்த பார்வையாளர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் திரும்ப அளிக்கப்படும் என கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்