ரியாலிட்டி ஷோவில் கால் பதிக்கும் இர்பான் பதான்

செவ்வாய், 28 ஜூலை 2015 (10:50 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இர்பான் பதான் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கால் பதிக்கவுள்ளார்.
இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இர்பான் பதான் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான ‘ஜலக் திக்லா ஜா ரீலோடட்’என்ற நடனப் போட்டியில் பங்குபெற உள்ளார். இப்போட்டியில் பல பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்று தங்கள் நடனத்திறமை வெளிபடுத்தி வருகின்றனர். மேலும் இப்போட்டியிலிருந்து வரும் பணத்தை கிரிக்கெட் அகாடமிக்காக பயன்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்