ஐபிஎல். கூத்து: அனுஷ்கா ஷர்மாவை ஜாலிக்கு மணந்த கோலி!

வியாழன், 17 ஏப்ரல் 2014 (09:59 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் விருந்தில் நடிகர் ஷாரூக்கான் நடத்திய ஜாலியான சுயம்வரம் நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா ஷர்மாவை மனைவியாக தேர்வு செய்து விராட் கோலி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வழக்கமாக தொடக்க விழா நடைபெறும் ஆனால் இந்த முறை 'என்னடா விளம்பரம்' என்று கவுண்டமணி பாணியில் அலுத்துக்கொண்ட ஐபிஎல் ஆர்பாட்டாக்காரர்கள்.. சீ... சீ. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்... பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கண்களுக்கு விருந்தளிக்கும் தடபுடலான நடனத்துக்கு மத்தியில் ஷாரூக்கான் நடத்திய வித்தியாசமான சுயம்வரம் தான் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது. ஷாரூக்கான், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலியை மேடைக்கு அழைத்து சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினார்.
அப்போது சமுக வலைதளங்கள் மூலம் விராட் கோலிக்கு, வந்த ஏராளமான காதல் அழைப்புகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 8 பெண்களின் புகைப்படங்களை ஷாரூக்கான் அவரிடம் காண்பித்தார். இவற்றில், உங்களுக்கு பிடித்தமான மங்கையை வாழ்க்கை துணைவியாக தேர்வு செய்யும்படி ஷாரூக்கான் கோலியிடம் கூறினார்.
 
கோலி எந்தவித பதட்டமும் தடுமாற்றமும் இல்லாமல் அனுஷ்கா ஷர்மாவை தேர்ந்தெடுத்தார். 
 
அந்த புகைப்படம் அவரது கழுத்தில் அணிவிக்கப்பட, அரங்கமே ஒரு கணம் ஆர்ப்பரித்தது. ஆனால் அது பற்றி அவர் எதுவும் பேசவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்