கண்களுக்கு விருந்தளிக்கும் தடபுடலான நடனத்துக்கு மத்தியில் ஷாரூக்கான் நடத்திய வித்தியாசமான சுயம்வரம் தான் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது. ஷாரூக்கான், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலியை மேடைக்கு அழைத்து சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினார்.
அப்போது சமுக வலைதளங்கள் மூலம் விராட் கோலிக்கு, வந்த ஏராளமான காதல் அழைப்புகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 8 பெண்களின் புகைப்படங்களை ஷாரூக்கான் அவரிடம் காண்பித்தார். இவற்றில், உங்களுக்கு பிடித்தமான மங்கையை வாழ்க்கை துணைவியாக தேர்வு செய்யும்படி ஷாரூக்கான் கோலியிடம் கூறினார்.