தற்போது இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிடம் சமீபத்தில் வெளிவந்த ஐபிஎல் சூதாட்ட தீர்ப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதுகுறித்து டிராவிட் கூறுகையில், ஐபிஎல் தொடரில் அரங்கேறிய சம்பவங்கள் வீரர்களுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறான செயல்கள் பல வீரர்களை பாதித்துள்ளது. இதுபோன்ற ஒரு தீர்ப்பு அணியில் உள்ள வீரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்றார்.