ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தும், அவரது சக விளையாட்டு வீர்ர்களான அஜித் சண்டிலா மற்றும் அங்கீட் சவான் ஆகியோர் மீது கடந்த 2013ஆம் ஆண்டு சூதாட்டம் மற்றும் ஏமாற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீம், அவருக்கு நெருக்கமான சோட்டா ஷகில் ஆகியோர் ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தை பின்னால் இருந்து இயக்கினார்கள் என்று டெல்லி காவல் துறையினர் குற்றப் பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர்.