அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 33 ரன்களும், கேன் வில்லியம்சன் 32 ரன்களும், யுவராஜ் சிங் 23 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில், புனே அணியில் அற்புதமாக பந்து வீசிய ஆடம் ஸம்பா, 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்னதாக, 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் ஷொஹைல் தன்வீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.