“இந்திய மக்கள் அருமையானவர்கள்” – மோடியை சந்தித்து பிரட் லீ புகழாரம்

செவ்வாய், 18 நவம்பர் 2014 (10:19 IST)
இந்திய மக்கள் அருமையானவர்கள் என்று ஆஸ்திரேலியா வேகப் பந்து வீச்சாளர் பிரட் லீ கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் ஜி20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சிட்னி நகருக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆஸ்திரேலியா வேகப் பந்து வீச்சாளர் பிரட் லீ சந்தித்தார்.

அப்போது பேசிய பிரட் லீ, “ இந்திய பிரதமர் மோடியை எனக்குப் பிடிக்கும். நமஸ்தே, ஆஸ்திரேலிவிற்கு வருக” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ நான் 1994ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு விளையாட வந்தேன். அது எனது இதயத்தில் நெருங்கிப் போன ஒன்றாக இருந்தது, இந்திய மக்கள் அருமையானவர்கள்” என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்