ஆஸ்திரேலியா தொடருக்கு பின் இந்திய அணியில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்காக நான் அணியை முற்றிலுமாக மாற்ற சொல்லவில்லை, ஆனால் சில வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை என்றார்.
மேலும் கூறிய அவர், தற்போது அணியில் இருக்கும் சில வீரர்கள் மூன்று, நான்கு முறை ஆஸ்திரேலியாவில் விளையாடி இருக்கிறார்கள் ஆனல் அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அணியில் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் 2019-ல் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார் செய்ய முடியும் என்றார்.