20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இலங்கை அபார வெற்றி

புதன், 10 பிப்ரவரி 2016 (00:15 IST)
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அதிரடியாக வெற்றி பெற்றது.
 

 
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று புனேவில் நடைபெற்றது.
 
இதில் டாஸ் வென்று இலங்கை அணி பீல்டிங் தேர்வை செய்தது. இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட் வரிசையாக அவுட் ஆனார்கள். இதனால், இந்திய அணி 18.5 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 
 
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோதாவில் இறங்கிய இலங்கை அணி, 18 வது ஓவரில் 105 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியை பறித்தது.
 
இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 31 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
 
இலங்கையின் அறிமுக பந்து வீச்சாளர்கள் ரஜிதா, சனாகா ஆகியோர் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்