அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் தவான் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் இரு வீரர்களும் சேர்ந்து பொறுப்புடன் விளையாட அணியின் ரன் வேகம் சற்று அதிகரித்தது. தொடர்ந்து அசத்திய தவான் அரை சதத்தை கடந்தார். இவருக்கு உறுதுணையாக விஜய்யும் ரன் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டத்தின் 23.3 ஓவரில் 107 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. களத்தில் தவான் 74 ரன்னிலும், முரளி விஜய் 33 ரன்னிலும் அவுட்டாகாமல் உள்ளனர்.