அதன்படி துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரகானே 4 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ராகுலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 107 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.