இந்தியா-நியூசிலாந்து 3வது டெஸ்ட் போட்டி: விராட் கோலி சதம்

சனி, 8 அக்டோபர் 2016 (17:39 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தூரில் நடைப்பெற்றும் வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது 13வது சதத்தை பதிவு செய்தார்.


 

 
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று டெஸ்ட போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
 
இன்று இந்தூரில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேடிங்கை தேர்ந்தெடுத்தது. 
 
தற்பொது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 184 பந்துகளில் 100 ரன்கள் கடந்து தனது 13வது சதத்தை பதிவு செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்