இந்தியா நெதர்லாந்து பயிற்சி போட்டி மழையால் தாமதம்!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:58 IST)
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த பயிற்சி ஆட்டங்களில் மூன்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்க இருந்தது. ஆனால் மழைக் காரணமாக இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதால் இந்த போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்