ஆசிய போட்டியில் இந்தியா - நேபாளம் மோதல்.. சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்..!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:31 IST)
கடந்த சில நாட்களாக சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் விளையாட்டும் உள்ளது என்பது தெரிந்ததை 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதி வருகின்றன.  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். 
 
ருத்ராதி 25 ரன்களில் அவுட் ஆன நிலையில் ஜெய் ஸ்வால் 79 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடி வருகிறார்.  சற்றுமுன் வரை இந்தியா 12 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. 
 
திலக் வர்மாஇரண்டு ரன்கள் அவுட் ஆகிவிட்டார் என்றும் விஜய் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தற்போது பேட்டிங் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்