டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷ பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இந்திய அணியில் அதிகபட்சமாகரோகித் சர்மா, ரெய்னா தலா 22 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் 17.2 ஓவர்களில் இந்திய அணி 92 ரன்களில் சுருண்டது. 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது.