இதில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 312 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக புஜாரா 145 ரன்களும், அமித் மிஸ்ரா 59 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் தம்மிகா பிரசாத் 4 விக்கெட்டுகளையும், ரங்கணா ஹெராத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அந்த அணியில் அதிகப்பட்சமாக திரிமன்னே 55 ரன்களையும், ஹெராத் 49 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை 111 ரன்கள் முன்னிலை பெற்றதோடு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 1 ரன்னுடனும், ரோஹித் சர்மா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதுவரை இந்தியா 132 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.