மேலும் முன்னனி வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியில் முரளி விஜய், அம்பதி ராயுடு, மனோஜ், கெடர், ராபின் உத்த்ப்பா, மனிஷ் திவாரி, ஹர்பஜன் சிங், அக்ஷர் படேல், தவல் குல்கர்னி, ரோஜர் பின்னி, புவனேஷ்குமார், ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கூறிய ரஹானே, “என்னுடைய தகுதி எவ்வளவு என்று எனக்குத் தெரியும். மேலும், என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நான் கேப்டன்சி குறித்து சிந்திக்கவில்லை. அதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. ஆனால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தன்னம்பிக்கையோடு விளையாடியதை அடுத்து, எனக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது.